PrimeTourist

வெளிநாட்டவரை கவரும் தமிழ்நாட்டின் ஐந்து சுற்றுலாத்தளங்கள்

அறிமுகம்

இந்தியாவின் தென்பகுதியிலேயே இயற்கை அழகு , வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள், பழமையான கட்டடக்கலை ஆச்சரியங்கள் நிறைந்து விளங்குகின்றது தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்களின் அன்பான விருந்தோம்பல் மற்றும், மாறுபட்டு நிலப்பரப்புகள், அழகிய கட்டிடக்கலைகள், பழமையான ஆன்மீக கோவில்கள் என்றவாறு ஏராளமான சிறப்சங்கள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயமாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

மகாபலிபுரத்தின் சிக்கலான செதுக்கப்பட்ட சிற்பங்கள் முதல் கன்னியாகுமரியின் அமைதியான நீர்த்தேக்க அமைப்புகள் வரை இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விடயங்களாக அமைவதோடு சுற்றுலாப் பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றது. அந்த வகையில் இன்று வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கும் தமிழ்நாட்டின் ஐந்து சுற்றுலாத்தளங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மகாவலிபுரம்- நினைவுச் சின்னங்களின் தாயகம்

மகாவலிபுரம் அல்லது மாமல்லபுரம் என அழைக்கப்படும் இது தமிழ்நாட்டின் பழமையான வரலாற்று நகரமாகும். பல்லவர்களின் பழங்கால கட்டிடக்கலை திறமைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் மற்றும் நினைவு சின்னங்களுக்கு பிரசித்தி பெற்றது.

இந்த சிற்பங்கள் பல்வேறு புராணக்கதைகள், தெய்வங்கள் மற்றும் பண்டைய தமிழ் இலக்கியத்தின் காட்சிகளை சித்தரிக்கின்றன. மகாவலிபுரத்தின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்று கடற்கரைகோவில் ஆகும். கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றான கடற்கரைக்கோவில் திராவிட கட்டிடக்கலையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கின்றது. குறிப்பாக சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது கடற்கரைக்கோவிலின் சிக்கலான சிற்பங்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கோபுரங்கள் பார்ப்பதற்கு மனதை மயக்கும் காட்சியை உருவாக்குகின்றது.

மேலும் அர்ச்சுனன் தவம், ஐந்து ரதங்கள் போன்ற ஏராளமான அம்சங்கள் பல்லவ வம்சத்தின் சிக்கலான கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்றன. இம்மகாவலிபுர நகரம் தமிழ்நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தின் சான்றாக உள்ளது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும் ஜவுளி உற்பத்தி மிகவும் பிரபல்யமானது பெருமளவிலான துணிகள் மற்றும் ஆடைகளை உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த இடம் அழகிய நீர்வீழ்ச்சிகளையும் மலைகளையும் கொண்டு இயற்கையை அம்சங்களை வெளிப்படுத்துகின்றது.

மேலும் ஏராளமான கோபுரங்களையும் கோயில்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் கட்டடக்கலை சிறப்பையும் மத முக்கியத்துவத்தையும் கொண்டவை ஆகும். மருதமலைக்கோவில், தியானலிங்க கோவில் ஆகியவை பக்தர்களையும் ஆன்மீக ஆர்வலர்களையும் ஈர்க்கும் புனிதமான கோவில்களாகும்.

மேற்கு மலைத்தொடர்ச்சியின் பசுமையால் சூழப்பட்ட கோயம்புத்தூர் ஏராளமான இயற்கை அம்சங்களை கொண்டுள்ளது. மூடுபனிமலைகள், தேயிலைத்தோட்டங்கள் மற்றும் அமைதியான ஏரிகளுக்கு புகழ் பெற்ற ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய அழகிய இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதியோகி சிவன் சிலை என அழைக்கப்படும் 112அடி உயரமான சிவன் சிலையும் இந் நகருக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கின்றது.

கும்பகோணம்

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அழகான நகரம். வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டது. புராணங்களில் மூழ்கி அற்புதமான கோவில்களால் அலங்கரிக்கப்பட்ட நகரமாகும்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தின் தொன்மை மற்றும் ஆழத்தை புரிந்து கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடமாகும்.

பழங்கால கோவில்களின் தொகுப்பு காரணமாக இந்த நகரம் கோவில் நகரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியின் கட்டடக்கலை அதிசயங்களில் ஆதி கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் மற்றும் கும்பேஸ்வரம் கோவில் போன்ற சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் கூடிய கோபுரங்களை கொண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.

இக் கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி தமிழகத்தின் கலைப் பொலிவையும் கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன.


கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகமம் திருவிழா முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும் புனித நதிகளுடன் இணைக்கப்படுவதாக நம்பப்படும் மகாமகம் குளத்தில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாக்கு வருகை தருகின்றனர்.

ஏலகிரி மலைகள்

ஏலகிரி மலைகள் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைதியான மலை வாசஸ்தலங்களாகும். பசுமையான பள்ளத்தாக்குகள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய நிலப்பரப்புக்களால் சூழப்பட்ட ஏலகிரி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைதி தேடுபவர்களின் புகழிடமாக உள்ளது.

பசுமையான காடுகள், மலைகள், ஏரிகள் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இப்பகுதியில் செழித்து வளவும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பலவற்றைக் காண மலைப்பாதைகள் வழியே நடை பயணங்களை மேற்கொள்ளலாம். ஏலகிரியின் முக்கியமான ஈர்ப்புக்களில் ஒன்று ஜலகம்பாறைகள் நீர்வீழ்ச்சிகள்.

அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் புங்கனூர் ஏரி, சுவாமிமலை, தொலைநோக்கி கண்காணிப்பகம், இயற்கை பூங்கா, நிலவூர் ஏரி ஜலகண்டீஸ்வரர் கோவில், வேலவன் கோவில், பெருமாள் கோவில் போன்ற பல்வேறு இடங்கள் மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஏலகிரியில் இயற்கை அழகும் இதமான காலநிலையும் ஆன்மாவை அமைதிப்படுத்தும் அமைதியான சூழலைத் தரவல்லது.

சென்னை – கலாச்சாரம் மையம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இப்பகுதியின் கலாச்சார மையமாக செயல்படும் ஒரு துடிப்பான பெருநகரமாகும். இந்நகரம் அதன் காலனித்துவ கடந்த காலத்தையும் பூர்வீக பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் அற்புதமான வரலாற்று அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட St.George கோட்டை காலனித்துவ வரலாற்றின் அடையாளமாக உள்ளது. St.Mary தேவாலயம் மற்றும் Fort Museum போன்றவை சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கு காரணமாக அமைகின்றது.

சென்னையின் பாரம்பரிய கலைகள் குறிப்பாக கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் மிகவும் புகழ்பெற்றது. சென்னை மாநகரம் அதன் கலை மற்றும் கலாச்சார பொக்கி~ங்களை வெளிப்படுத்தும் பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் கலைக்கூடங்களை கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான கவர்மெண்ட் மியூசியம் பழங்கால தொல்பொருள் கண்டுபிடிப்புகளும் விரிவான தொகுப்பை கொண்டுள்ளது.

இவற்றை பார்வையிட பலர் சென்னை மாநகரத்துக்கு வருகை தருகின்றார்கள். மேலும் உலகின் மிக நீளமான நகர்புற கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. தென்னிந்திய பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, சுவைமிகு பிரியாணி போன்ற உணவுகளை ருசி பார்க்கவும் முடியும்.
கலாச்சாரஇடங்கள், இசை, உணவு, கட்டடக்கலை, இயற்கை அழகு என பல்வேறு காரணிகள் சென்னை நகரை நோக்கி பலரையும் கவர்ந்திழுக்கின்றது.

முடிவுரை

தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியம், இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள் மற்றும் ஆன்மீக பொக்கிஷங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. மகாபலிபுரத்தின் பழங்கால கல் சிற்பங்கள், சென்னை, கோயம்பத்தூர், கும்பகோணம், ஏலகிரி மலைகள், அமைதியான கடற்கரைகள் வரை, ஒவ்வொரு ஈர்ப்பும் ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. இந்த ஐந்து சுற்றுலா இடங்களுக்குச் செல்வதன் மூலம், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் வரலாறு, கலை மற்றும் இயற்கை அதிசயங்களை கண்டுகளிக்கலாம்.

<meta name=”keywords” content=”top 10 beautiful places in tamil nadu, must-visit beautiful places in tamil nadu, famous beautiful places in tamil nadu, popular beautiful places in tamil nadu, tourist places in tamil nadu, places to visit in tamil nadu, travel destinations in tamil nadu, vacation spots in tamil nadu, honeymoon destinations in tamil nadu, weekend getaways from tamil nadu”/>

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *