Home » News » TVK தலைவர் விஜய் கரூர் பிரச்சார நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

TVK தலைவர் விஜய் கரூர் பிரச்சார நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

|

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் 3வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தவெக தலைவர் விஜய்யை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடிய நிலையில், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். இதன்பின் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, பலரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி இரங்கல் செய்திகள் தெரிவித்து வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை கரூர் செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை உடனடியாக கரூர் செல்லவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.