Home » News » கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு – தொல். திருமாவளவன் இரங்கல்

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு – தொல். திருமாவளவன் இரங்கல்

|

TVK தலைவர் விஜய் கரூரில் 3வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். விஜய்யை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடிய நிலையில், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர். இதன்பின் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, பலரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று 38 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் VCK தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய இரங்கல் செய்திய தெரிவித்துள்ளார்

கரூர் கொடுந்துயரம்:

——————–

கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

———————————————–

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

விஜய் அவர்களின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.

கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்:

தொல். திருமாவளவன்.