சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன்படி பெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
பெஞ்சல் புயல், கரையை கடந்தபோது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. புயல் காரணமாக தமிழகம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரையைக் கடந்தும் புயல் நகராமல் இருந்துவரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.